முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார உள்ளிட்ட 06 பேருக்கு குற்றப்பத்திரிகை…

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார உள்ளிட்ட 06 பேருக்கு குற்றப்பத்திரிகை…

ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அரசியல் செயற்பாடுகளுக்காக 12.5 கோடி ரூபாயை பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு இன்று(25) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகள் தலா 25,000 ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் பெறுமதியான 02 சரீர பிணை அடிப்படையிலும் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த இந்த வழங்கு எதிர்வரும் மே மாதம் 04 ம் திகதி மீண்டும விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Rishma