பாராளுமன்ற உறுப்பினர் சனத்திற்கு பிணை – சகோதரர் விளக்கமறியலில்…

பாராளுமன்ற உறுப்பினர் சனத்திற்கு பிணை – சகோதரர் விளக்கமறியலில்…

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா பிணையில் விடுவிக்க சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை,அவரது சகோதரர் ஒருவரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் கருக்குளிய ஜயதிலகாராம விகாரையில் வைத்து அப்போதைய ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளராக இருந்த தனசேன சுரசிங்க மீது தாக்குதல் நடத்தி கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சந்தேகநபர்களுக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.