கிரிக்கெட் நிர்வாக சபைக்கு இடைக்கால நிர்வாகக் குழு…

கிரிக்கெட் நிர்வாக சபைக்கு இடைக்கால நிர்வாகக் குழு…

இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாக இடைக்கால நிர்வாக குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஃபைசர் முஸ்தபா, இன்று(31) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர், குறித்த இந்த இடைக்கால நிர்வாகக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாக சபையின் அதிகாரக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.