முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றிற்கு புதியதொரு எரிபொருள் வகை..

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றிற்கு புதியதொரு எரிபொருள் வகை..

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் புதிய வகையிலான பெட்ரோல் வகை ஒன்று அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்காக புதிய பரிசோதனைகள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று(19) கொழும்பில் தெரிவித்திருந்தார்

தொடர்ந்தும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அங்கு கருத்து தெரிவிக்கையில், ´கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பதற்திற்கு மாறாக செயற்படவேண்டியிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலைதொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம்.

தற்போது நாம் பொதுமக்களுக்கு எவ்வாறு வேறு வழிகளில் நிவாரனங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம். அதற்கமைய பொருளாதார ரீதியாக நிவாரனம் வழங்கும் முகமாக முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம். இது தொடர்பாக பல பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்´ என்றார்.