ஐ. நா. மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்…

ஐ. நா. மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்…

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். .

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று செய்தியாள்ர்களை சந்தித்து பேசியுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.