சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

மேற்கிந்திய அணிகளுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி அபராதம் மற்றும் போட்டித்தடைக்கு ஆளாகியுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் தினேஷ் சந்திமால் இன்று(21) சர்வதேச கிரிக்கெட் சபையில் மேன்முறையீடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அதன்படி, மேற்கிந்திய அணியுடன் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட சந்திமாலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த போட்டிக்கு பின்னர் நீதிமன்றம் ஆணையாளர் ஒருவரின் கீழ் எதிர்வரும் நாட்களில் இது குறித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஐ.சீ.சீ தெரிவித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.