அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனத்தில் உள்ள அமைச்சர்கள் குறித்து விசாரணை…

அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனத்தில் உள்ள அமைச்சர்கள் குறித்து விசாரணை…

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் மதுபானத்தை விற்பனை செய்யும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்து விசாரணைகளை இலங்கை மதுவரி திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

அலோசியஸின் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளாக சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவால் அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.