வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது…

வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது…

இங்கிலாந்து தலைநகர் லண்டன் சாரிங் கிராஸ் புகையிரத நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை புகையிரத நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் அங்கிருந்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் புகையிரத நிலையத்தில் குவிக்கப்பட்டதுடன், சிறிது நேரத்திற்கு பிறகு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.