விசேட புகையிரத சேவைகள்…

விசேட புகையிரத சேவைகள்…

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை புகையிரத சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க தெரிவித்தார்.

குறித்த இந்த புகையிரத சேவைகள் இம்மாதம் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்மதி தினத்தன்று மஹாவயில் இருந்து அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து மஹாவ வரையிலும் விசேட புகையிரத சேவை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்மதி தினத்தன்று அதிகாலை 3.30 இற்கு விசேட புகையிரதம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து, அனுராதபுரம் வரையில் பயணிக்கும். இந்த புகையிரதம் காலை ஒன்பது மணிக்கு அனுராதபுர புகையிரத நிலையத்தை சென்றடையும்.

இதேபோன்று இதே தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து கனேவத்தை வரையிலும் கனேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட புகையிரத சேவை இடம்பெறும். விசேடமாக 28ம் 29ம் திகதிகளில் மஹாவயில் இருந்த அனுராதபுரம் வரையில் விசேட புகையிரத சேவை இடம்பெறும் என்றும் இலங்கை புகையிரத சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க மேலும் தெரிவித்தார்.