கொஸ்கொட தாரக்கவின் தாயார் கைது…

கொஸ்கொட தாரக்கவின் தாயார் கைது…

மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகத்திற்குரியவரான கொஸ்கொட தாரக்கவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில், தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இருவரில் ஒருவர் தற்போது தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாத்தறையில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக்க உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பேரும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.