தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

கொழும்பில் இன்று(25) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்தை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
ஒன்றிணைத்த தபால் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.