இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி அதிகரிப்பு…

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி அதிகரிப்பு…

உள்நாட்டு பழ உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் ஜூலை மதம் முதல் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி அமைப்பினை ஸ்தாபிக்கும் நிகழ்வில் நேற்று(25) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பெயரிடப்படும் பழ மரங்களை அனுமதி பத்திரமின்றி வெட்டுவதை தடைசெய்யும் திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.