நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழப்பு…

நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழப்பு…

மத்திய நைஜீரியாவில் இரு இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் நிலப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது