வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்…

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்…

கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவ பல்கலைக்கழமும் இணைந்து இவ் விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையான பொதுமக்கள் போக்குவரத்து திட்டம் ஒன்று விருத்தி செய்யப்படும் வரை, அமையவுள்ள ஒரு தற்காலிக நடைமுறையே இதுவாகும் என்று மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்தார்.

இந்;த செயற்றிட்டத்தில் கூகிள் மப்பின் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு வாகன நெரிசலிலுள்ள வாகனங்களின் இலக்கத் தகடுகள் அடையாளம் காணப்படும் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.