பனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி….

பனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி….

ரஷ்யாவில் இடம்பெறும் 2018 பீபா உலக கிண்ண கால் பந்தாட்ட தொடரின் குழு G யில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதுபோல் குழு H சில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் செனகல் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில், இரு அணிகளும் தலா 02 கோல்களை பெற்றுக் கொள்ள போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது.

போலாந்து மற்றும் கொலம்பியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொலம்பியா அணி 3:0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிப்பெற்றது.

இதனிடையே இன்றைய தினம் மேலும் நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி, குழு A  யில் இடம்பெற்றுள்ள சவுதி அரேபியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான போட்டியும், உருகுவே மற்றும் ரஸ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.

அதுபோல் குழு B யில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் போர்த்துகல் அணிகளுக்கு இடையிலான போட்டியும், ஸ்பேய்ன் மற்றும் மொராக்கோ ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.