ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் டீ.ஆர். விஜயவர்தன மாவத்தை ஊடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் சேவைகள் அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மருதானை முதல் கோட்டை வரையான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.