எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 07ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(31) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வெலிக்டை சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டு வந்த எமில்ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் காவல் துறை பரிசோதகரான நியோமல் ரங்கஜீவ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma