தஜிகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து…

தஜிகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து…

தஜிகிஸ்தானில் மலைப்பகுதியில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தஜிகிஸ்தான் நாட்டின் மிக உயரமான இஸ்மோலி சோமனி மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்ட 13 மலையேற்ற வீரர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அடிவார முகாமிற்கு நெருங்கியபோது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 மலையேற்ற வீரர்கள் உட்பட 3 விமானிகள் என அனைவரும் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.