விடுமுறை மாதங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது என்ற செய்தி பொய்யானது…

விடுமுறை மாதங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது என்ற செய்தி பொய்யானது…

விடுமுறையில் உள்ள மாதங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை வழங்காது நிறுத்த கல்வியமைச்சரால், அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட முனைவதாக தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வியமைச்சு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பொய்யான செய்தியினை சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதானது, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வியமைச்சின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சதி என குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்படுகின்றது.