கொச்சின் விமான நிலையத்திற்கு பூட்டு…

கொச்சின் விமான நிலையத்திற்கு பூட்டு…

கேரளாவில் தொடர் கடும் மழை காரணமாக கொச்சின் விமான நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ள பாதிப்பினால் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.