களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியாலம் நீர் விநியோக தடை…

களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியாலம் நீர் விநியோக தடை…

திருத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம்(17) களனி, வத்தளை மற்றும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

17 ஆம் திகதி இரவு 9.00 மணி முதல் 18 ஆம் திகதி அதிகாலை 03.00 மணி வரையான 18 மணித்தியாலம் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி மற்றும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதி, பேலியகொட மற்றும் வத்தளை – மாபோலை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதியின் கோனவல வீதி, மகுரூவில வீதி, விஜயராம வீதி மற்றும் பெல்லேகல ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.