நேவி சம்பத் 29ம் திகதி வரை விளக்கமறியலில்…

நேவி சம்பத் 29ம் திகதி வரை விளக்கமறியலில்…

மாணவர்கள் உட்பட பதினேழு பேரைக் கொலை செய்த விவகாரத்தில் நேவி சம்பத்தை எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில், கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சி அல்லது நேவி சம்பத் என்பவருக்குத் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்திருந்த நிலையில் அவர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.