ரூபாவின் பெறுமதியை ஆராய ஐ.தே.க.யினால் விசேட குழு…

ரூபாவின் பெறுமதியை ஆராய ஐ.தே.க.யினால் விசேட குழு…

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் டொலரின் விலையேற்றத்திற்கு முகம்கொடுத்து ஏற்றுமதித் துறையைப் பலப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விசேட குழு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கூறப்படுகின்றது.

டொலரின் விலையேற்றத்திற்கு ஏற்ப, ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை முன்வைப்பது இக்குழுவின் பொறுப்பாகும் எனவும் ஐ.தே.க. தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.