ஸிகா வைரஸ் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

ஸிகா வைரஸ் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பாக ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 61 – ஆக மேலும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 11 கர்ப்பிணி பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.