போர்ச்சுக்கல்லில் சூறாவளி – 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு…

போர்ச்சுக்கல்லில் சூறாவளி – 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு…

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லை ‘லெஸ்லி’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிபுயல் தாக்கியதில் மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுக்கல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

‘லெஸ்லி’ புயல் தாக்கிய பின் மணிக்கு 176 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பின் மற்றும் லைரியா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.