முன்னாள்  சிறைச்சாலைகள் ஆணையாளர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் 27 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.