மின்சாரத்திற்கான விலைச் சூத்திரமானது பொய்யானது…

மின்சாரத்திற்கான விலைச் சூத்திரமானது பொய்யானது…

மின் கட்டணப் பட்டியலுக்கு விலைச் சூத்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்தி மின் கட்டணத்தினை அதிகரிக்க அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது எனவும், மின் கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இல்லை என்றும் மின்சார அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்புடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.