குசல் ஜனித்திற்கு இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி நிச்சயமற்ற நிலையில்…

குசல் ஜனித்திற்கு இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி நிச்சயமற்ற நிலையில்…

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா நாளை(17) பல்லேகல மைதானத்தில் சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் இடையே குசல் ஜனித் பெரேராவுக்கு தொடைப் பகுதியில் உபாதை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மூன்றாவது போட்டியில் பங்கேற்பது குறித்து இன்றைய தினம் (16) இடம்பெறவுள்ள வைத்திய பரிசோதனைகளின் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.