ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இரத்து செய்யக் கோரி மனு…!
பொது பணத்தை தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இரத்து செய்யுமாறு கோரி இன்று(11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருக்க தகுதியில்லை என தெரிவித்து குறித்த மனு முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பிலான மனு விசாரணை நிறைவுறும் வரையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிற்குமாறு தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.