Update – பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு ஏதிரான மனு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

Update – பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு ஏதிரான மனு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட மனுவினை எதிர்வரும் ஜனவரி மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(12) தீர்மானித்துள்ளது.

++++++++++++++++++++++++++   UPDATE 09:02 AM /2018:12:12

பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு ஏதிரான மனு விசாரணை இன்று(12)…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட மனுவினை இன்று(12) மீளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

குறித்த மனுவினை பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, இன்று(12) வரையில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு எதிராகமேன்முறையீட்டு நீதிமன்றமானது இடைக்காலத் தடை விதித்திருந்தது.

அவ்வாறு இருக்க இன்று(12) மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.