புகையிரதத்தில் சிக்கி வாலிபர் பலி..

புகையிரதத்தில் சிக்கி வாலிபர் பலி..

அமெரிக்காவின் சுரங்க புகையிரத பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், புகையிரதத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிராண்ட் சென்ட்ரல் புகையிரத நிலையத்தில் உள்ள சுரங்க நடைமேடையில் வாலிபர் ஒருவர் சென்றுக் கொண்டிருந்தபோது அதிவேகமாக சென்றுகொண்டிருந்த புகையிரதத்தின் கதவில் அந்த வாலிபரின் சட்டை மாட்டிக் கொண்டது. இதனால் அவர் இழுத்துச் செல்லப்பட்டு, சுரங்கப்பதை தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த வாலிபரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.