மாகந்துரே மதூஷின் சகாக்கள் 13 பேர் இஸ்ரேலில் கைது..

மாகந்துரே மதூஷின் சகாக்கள் 13 பேர் இஸ்ரேலில் கைது..

(Fastnews | Colombo) – துபாயில் கைதான பாதாள உலகக் குழுவின் தலைவனான் மாகந்துரே மதூஷ் இனது சகாக்களான மேலும் 13 பேர் இஸ்ரேல் நாட்டில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா முறையின் கீழ் குறித்த இலங்கையர்கள் உள்ளிட்ட 60 பேர் இஸ்ரேல் நாட்டுக்கு நுழைய முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகந்துரே மதூஷின் கைதின் பின்னர் இலங்கை பொலிசார் அதிரடி தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் இந்நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கு இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளதாகவும் குறித்த நபர்களை இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.