சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது…

சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது…

(FASTNEWS | COLOMBO) – நீர்கொழும்பு, போரதொட்ட பிரதேசத்தில் வைத்து 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன், ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருட்களுடன் இருவரை, நீர்கொழும்பு பொலிஸார், இன்று (22) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.