தடம்புரள்வு காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…

தடம்புரள்வு காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…

(FASTNEWS-COLOMBO) கொழும்பு – கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் புகையிரதம் பாணந்துறை புகையிரத நிலையம் வரையும் , மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதம் அளுத்கம வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று களுத்துறை பிரதேசத்தில் இன்று காலை தடம்புரண்டமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கரையோர புகையிரத போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் ஒரு சில மணி நேரம் தேவைப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.