மாகந்துரே மதூஷ் மற்றும் அவரது சகாக்களின் சொத்துக்கள் அரசுடைமை…

மாகந்துரே மதூஷ் மற்றும் அவரது சகாக்களின் சொத்துக்கள் அரசுடைமை…

(FASTNEWS |COLOMBO) – மாகந்துரே மதூஷ், அவரது சகாக்கள் மற்றும் அவருக்கு மறைமுகமாக உதவிய அனைவரது சொத்துக்களையும் அரசுடமையாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர்களுக்கு எதிராக ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.