இன்று(18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு…

இன்று(18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இன்று(18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.