மாத்தறை – பெலியத்த வரையிலான புகையிரத சேவை…

மாத்தறை – பெலியத்த வரையிலான புகையிரத சேவை…

(FASTNEWS|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்த வரையிலான புகையிரத சேவை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் புகையிரதம் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றன,

எதிர்வரும் புத்தாண்டுக் காலப்பகுதியில் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விசேட புகையிரத மற்றும் பேரூந்து சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.