குண்டுவெடிப்பு மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகை ராதிகா…

குண்டுவெடிப்பு மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகை ராதிகா…

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் இன்று 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்னரே தான் அங்கிருந்து புறப்பட்டதாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா சரத்குமார், குண்டுவெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு கிளம்பியதன் மூலம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இலங்கையில் குண்டுவெடிப்பு, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.