பிலிப்பைன்சில் மீண்டும் நிலநடுக்கம்…

பிலிப்பைன்சில் மீண்டும் நிலநடுக்கம்…

(FASTNEWS|COLOMBO) பிலிப்பைன்சில் இன்று(23) மீண்டும் 6.4 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று 6.1 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தில் போரக், லுபாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கு அடுக்குமாடி வீடுகள், காங்கிரீட் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

போரக் நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி தவித்த பலர் மீட்கப்பட்டனர்.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.