ஞானசார தேரருக்கு விடுதலை

ஞானசார தேரருக்கு விடுதலை

(FASTNEWS |COLOMBO) – சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று(23) வழங்கப்பட்ட நிலையில் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.