ஞானசார தேரரின் விடுதலைக்கு சந்தியா எக்நெலிகொட எதிர்ப்பு

ஞானசார தேரரின் விடுதலைக்கு சந்தியா எக்நெலிகொட எதிர்ப்பு

(FASTNEWS |COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமையினை தான் வன்மையாக எதிர்ப்பதாக சந்தியா எக்நெலிகொட இன்று(23) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி எதோ ஒருவிதத்தில் ஞானசார தேரரை விடுதலை செய்து 19ம் அரசியலமைப்பு சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைய ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தான் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக சந்தியா எக்நெலிகொட தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.