சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,300 ஆக அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,300 ஆக அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO)- கடந்த வருட பொசொன் தினத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,300 ஆக அதிகரித்துள்ளதாக சிகிரியாவின் திட்டப் பணிப்பாளர் மேஜர் அனுர நிசாந்த தெரிவித்துள்ளார்.

சீகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சுமார் நாள் ஒன்றுக்கு 1,500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.