இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்

இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்

(FASTNEWS|COLOMBO) – தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் மின்வெட்டு காரணமாக 2 நாடுகளிலும் இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதேவேளை, பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரஈவ்க்கப்பட்டுள்ளது.

பலமணி நேரங்களுக்கு பிறகு படிபடியாக மின்இணைப்பு சீரடைய தொடங்கியது. அர்ஜென்டினாவில் 56 சதவீத மின்இணைப்பு திரும்ப கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், உருகுவேயிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மின்இணைப்பு கிடைத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.