காத்தான்குடி காவற்துறை நிலையத்தின் முன்னாள், இந்நாள் பொறுப்பதிகாரிகள் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்

காத்தான்குடி காவற்துறை நிலையத்தின் முன்னாள், இந்நாள் பொறுப்பதிகாரிகள் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைக்கான தெரிவுக் குழு இன்று(18) மீண்டும் சாட்சிப் பதிவினை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(18) பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இன்றையதினம் காத்தான்குடி காவற்துறை நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் நடப்பு பொறுப்பதிகாரி ஆகியோர் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளதோடு ‘சுஃபி’ முஸ்லிம் உறுப்பினர்கள் சிலரும் இன்று சாட்சி வழங்க அழைக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.