முஹம்மத் பாரூக் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முஹம்மத் பாரூக் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரென தெரிவிக்கும் முஹம்மத் பாரூக் முஹம்மத் பவாஸ் என்பவரை தொடர்ந்தும் எதிர்வரும் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை வாழைத்தோட்ட பொலிசாரிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று(18) நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.