கோட்டாபய ராஜபக்க்ஷவின் மனு தள்ளுபடி

கோட்டாபய ராஜபக்க்ஷவின் மனு தள்ளுபடி

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று(18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது.