பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கடுமையாக சேதம் அடைந்ததுடன் பயணிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.