இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி

இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி

(FASTNEWS|COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டி 35 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது

இதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கிறிஸ் கெய்ல் 72 ஓட்;டங்களை பெற்று கொடுத்தார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 30 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. .