லிப்ட் அறுந்து விழுந்து விபத்து – மூவர் உயிரிழப்பு

லிப்ட் அறுந்து விழுந்து விபத்து – மூவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – தென்கொரியாவில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில்0 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

கட்டிடத்தின் 15-வது மாடியில் 6 பேர் கீழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினர். சற்றும் எதிர்பாராத வகையில் குறித்த லிப்ட் அறுந்து 15-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.