இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

(FASTNEWS | COLOMBO) – இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் (வயது 57) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி தலைவராக இருந்துள்ளார்.

1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.